இவ்வாண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் அது ஒரு தடையாக அமையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 3 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பரீட்சசைக்கு தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் குறிப்பிட்ட திகதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்ப முடிவு திகதி மாற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.











