அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி அமுலுக்கு வருவதற்குள் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாவிட்டால், அமெரிக்காவிற்கு எதிராகத் தகுந்த பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தமது அரசு பரிசீலித்து வருவதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள ஷார்லட்டவுன் நகரில் நாட்டின் 13 மாகாண முதலமைச்சர்களுடன் (Premiers) நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே பிரதமர் மார்க் கார்னி இதனைத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்குள் கனடியப் பொருட்கள் மீதான 50% கூடுதல் வரிவிதிப்பு அமெரிக்காவில் அமுலுக்கு வரவுள்ள நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து “அனைத்து விதமான பதிலடி நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன” எனப் பிரதமர் மார்க் கார்னி உறுதிபடக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த வரி அச்சுறுத்தலால் மதுபானங்கள், இலத்திரனியல் பொருட்கள், ஹாக்கி மட்டைகள் உட்பட சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிப் பொருட்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்கள் இதனால் அதிக பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











