கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வும் கலந்துரையாடலும் யாழ்ப்பாணம் இந்து வாலிபர் சங்கத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
தமிழ் தேசிய கட்சியின் மூத்த உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான ந. ஶ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பேராசிரியர் விக்னேஷ் , யாழ். மாநகர சபை உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.











