வலி.வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 04ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் , அன்றைய தினம் தாம் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் மயிலிட்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமது காணிகளை விடுவிக்குமாறு மயிலிட்டியில் போராட்டம் நடத்திய மக்களே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.











