நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (28) வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
இதன் முக்கிய அங்கமாக, அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நேர்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரச உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடைபவனியானது வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி ஹொரவப்பொத்தானை வீதியின் ஊடாக வவுனியா நகரினை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர ஏ9 வீதியின் ஊடாக மீண்டும் மாவட்ட செயலகத்தை அடைந்திருந்தது.
இவ்நடைபவனியில் மாவட்ட செயலாளர் சரத் சந்திர உட்பட உயர் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











