EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

ஆடி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

செயலமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றான வெப்பத் தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் மத்திய பசுபிக் பிராந்தியக் கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது உருவாக்கும்.

மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.

அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.

“எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டு கொண்டார்.

இவ் நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்

ஆடி 25, 2026
கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான ஸ்பெயின் பிரஜை
அண்மைய செய்திகள்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான ஸ்பெயின் பிரஜை

ஆடி 25, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

ஆடி 25, 2026
யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்
அண்மைய செய்திகள்

யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

ஆடி 25, 2026
யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி
அண்மைய செய்திகள்

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி

ஆடி 25, 2026
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்
அண்மைய செய்திகள்

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்

ஆடி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

மட்டக்களப்பில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

6 நாட்கள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

3 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

2 நாட்கள் முன்னர்
மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்த கனடா மத்திய வங்கிக்குத் தடை — தொழிலாளர் உறவுகள் சபை உத்தரவு!

மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்த கனடா மத்திய வங்கிக்குத் தடை — தொழிலாளர் உறவுகள் சபை உத்தரவு!

23 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In