முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மற்றும் பருத் தழும்புகளைக் குறைக்க, வீட்டிலேயே கிடைக்கும் சில இயற்கைப் பொருட்களைக் போதும்.
இதில் உருளைக்கிழங்கு, எலுமிச்சைச் சாறு, தேன் ஆகிய மூன்றும் முக்கியப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
முதலில் முகத்தை நன்கு சுத்தம் செய்து, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில், குறிப்பாக கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்தக் கலவையில் உள்ள பொருட்கள், சருமத்தைப் பொலிவுறச் செய்யவும், ஈரப்பதத்தைப் பேணவும், முகம் புத்துணர்ச்சியுடன் தோன்றவும் உதவுகின்றது.











