EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

புரட்டாதி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குறித்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

கீரிமலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் நேற்றைய தினம் சனிக்கிழமை, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை அன்றைய தினத்துக்குள் அகற்றுமாறும், அவை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கோரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை சார்ந்த கழிவுகளை முறையற்ற வகையில் கையாளுதல் என்பது பொதுச் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவற்றை முறையான வகையில் சேகரித்து, பிரித்து, பாதுகாப்பாகக் கையாள்வதும் இறுதியாக உரிய முறையில் அகற்றுவதும் அவசியமானதாகும்.

இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய சுகாதாரக் கழிவு முகாமைத்துவத் திட்டமும், சுகாதாரக் கழிவுகளை முறையாகக் கையாளாதது நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடுவதுடன், கழிவுகளைப் பிரித்தல், பொதியிடுதல், கையாளுதல், சேமித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும், சுகாதார நிலையங்களால் உருவாக்கப்படும் மருத்துவக் கழிவுகள் இறுதி அகற்றல் வரை முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு
அண்மைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

புரட்டாதி 20, 2026
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்
அண்மைய செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

புரட்டாதி 20, 2026
யாழில் திடீர் மின்சார விநியோக தடை
அண்மைய செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

புரட்டாதி 20, 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 20, 2026
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

புரட்டாதி 20, 2026
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

4 நாட்கள் முன்னர்
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

1 நாள் முன்னர்
பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்

பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்

4 நாட்கள் முன்னர்
மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

5 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In