“பனை வாழ்வின் விருச்சம் நாட்டின் சுபிட்சம்” எனும் தொனிப்பொருளில் தேசியக் கண்காட்சி இன்று வவுனியா மாநகர சபை மைதானம் மற்றும் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி சபையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்று வருகின்ற இந்த கண்காட்சி வவுனியா மாநகர சபை மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பனைசார் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் இடம்பெறுவதுடன் பனை ஆராய்ச்சி செயற்றிட்டமும் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் அ. அற்புத ராஜா அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.











