EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
சீனாவை உலுக்கிய ‘டால்பின்’ புயல்: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம், 1,400 விமானங்கள் ரத்து!

சீனாவை உலுக்கிய ‘டால்பின்’ புயல்: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம், 1,400 விமானங்கள் ரத்து!

ஆவணி 9, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள யுஹுவான் அருகே ‘டால்பின்’ புயல் மணிக்கு 151 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது. இதன் காரணமாகச் சீனா முழுவதும் தீவிர ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடந்தபோது வீசிய சண்டமாருதம் காரணமாக அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலின் சீற்றத்தால் ஷாங்காய் நகரின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் இயங்கவிருந்த 1,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

மேலும், ஹாங்சோ விமான நிலையத்தில் சுமார் 270 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆபத்தான கடலோரப் பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள மலைப்பகுதிகளிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய மாகாணங்களில் 200-க்கும் மேற்பட்ட படகுப் போக்குவரத்துப் பாதைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கிய ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சீனாவைத் தாக்குவதற்கு முன்பாக, இந்த டால்பின் புயல் ஜப்பானின் ஒகினாவா தீவுகளை மணிக்கு 216 கி.மீ வேகத்தில் மிகத் தீவிரமாகத் தாக்கியது. அதில் 6 பேர் காயமடைந்ததுடன், 50,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் தைவானின் வடக்குப் பகுதியிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் 180-க்கும் மேற்பட்ட விமான மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சீன வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மத்திய மற்றும் கிழக்கு ஜெஜியாங், ஷாங்காய், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழையும் நிலச்சரிவு அபாயமும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘நௌல்’ புயல் சீனாவைத் தாக்கிச் சேதங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது ‘டால்பின்’ புயல் மீண்டும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்க தனித்தீர்மானம்: நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்!
உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்க தனித்தீர்மானம்: நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்!

ஆவணி 10, 2026
ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட மாணவர்கள் திட்டம்!
உலகம்

ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட மாணவர்கள் திட்டம்!

ஆவணி 10, 2026
ரூ.100 கோடி சொத்து, டெஸ்லா கார், போலி ஐஏஎஸ் கார்டு: பீகாரில் ரகசிய ஏஜென்ட் என ஏமாற்றிய நபர் கைது!
உலகம்

ரூ.100 கோடி சொத்து, டெஸ்லா கார், போலி ஐஏஎஸ் கார்டு: பீகாரில் ரகசிய ஏஜென்ட் என ஏமாற்றிய நபர் கைது!

ஆவணி 10, 2026
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி மர்ம மரணம்!
உலகம்

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி மர்ம மரணம்!

ஆவணி 10, 2026
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை
உலகம்

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை

ஆவணி 9, 2026
ஆகஸ்ட் 14-ல் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
உலகம்

ஆகஸ்ட் 14-ல் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆவணி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

6 நாட்கள் முன்னர்
கொட்டகலை  லொக்கில் பகுதியில் வெள்ளம் –   40 குடும்பங்கள் பாதிப்பு

கொட்டகலை லொக்கில் பகுதியில் வெள்ளம் – 40 குடும்பங்கள் பாதிப்பு

6 நாட்கள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

5 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In