EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கில் வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கில் வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆவணி 11, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்றது.

இதன்படி வெள்ளத்தை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில், வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு அறிவித்தார்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், இடர்நிலை முகாமைத்துவத்துக்குத் தேவையான அனைத்து முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

அவசரநிலைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போதைய காலப்பகுதி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் வருகை தரும் பருவமாக இருப்பதால், தமது எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையை உறுதிப்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி. காணொலிப் பதிவுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும்
பணிப்புரை வழங்கினார்.

இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இலங்கை செயலணி வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம், திட்டமிடல் மற்றும் பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர்கள், நகர சபைகளின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அண்மைய செய்திகள்

ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஆவணி 11, 2026
முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

ஆவணி 11, 2026
யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு
இலங்கை

யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு

ஆவணி 11, 2026
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இலங்கை

யாழ் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 11, 2026
மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

6 நாட்கள் முன்னர்
ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

6 நாட்கள் முன்னர்
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

3 நாட்கள் முன்னர்
அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In