EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

ஆவணி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் காணொளிச் செய்தி ஒன்று ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் இருந்து சுமார் 5 மணி நேரம் நீக்கப்பட்டிருந்த விவகாரத்தில், மெட்டா (Meta) நிறுவனம் இந்திய மத்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவரும் மூத்த அதிகாரியுமான ஜோயல் கப்லான், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் பதிவைக் கட்டுப்படுத்திய தவறான நடவடிக்கைக்கு மெட்டா நிறுவனம் சார்பில் அஸ்வினி வைஷ்ணவிடம் ஜோயல் கப்லான் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக, ஜூலை 28 அன்று நாட்டின் இளைஞர்களிடையே உரையாற்றி வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ, நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 5:30 மணி வரை ஃபேஸ்புக்கில்  கிடைக்கவில்லை. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவரும் பாஜக எம்பியுமான நிஷிகாந்த் துபே, மெட்டா தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு 3 நாட்கள் அவகாசம் அளித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். தவறுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் மெட்டா பெற்றுள்ள சட்டப்பூர்வப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்தே இந்த அவசரச் சந்திப்பு நடைபெற்றது.

நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சூழலில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மெட்டா நிறுவனம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தவறுதலாக அந்த வீடியோ நீக்கப்பட்டதாகவும், பின்னர் உடனடியாக மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், மெட்டா அளித்த இந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், வரும் நாட்களில் இது தொடர்பான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஆவணி 7, 2026
Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

ஆவணி 7, 2026
திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 6, 2026
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அண்மைய செய்திகள்

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆவணி 6, 2026
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!
அண்மைய செய்திகள்

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆவணி 6, 2026
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 81-வது ஆண்டு நினைவு இன்று!
உலகம்

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 81-வது ஆண்டு நினைவு இன்று!

ஆவணி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

2 நாட்கள் முன்னர்
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In