வளைகுடா பிராந்தியத்தில் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானுடனான அனைத்து வகையான வர்த்தகம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வணிகச் செயல்பாடுகளை உடனடியாக இடைநிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வான்வழி எச்சரிக்கைகளைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த அதிரடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஈரானியப் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடல் எல்லைக்குள் விழுந்ததாகத் தெரிகிறது.
கடல்வழிப் போக்குவரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைக் தொடர்ந்து, நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் விழிப்புடன் முடக்கிவிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மறுபுறம், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சகம், தாம் எந்தவொரு ஏவுகணையையும் ஏவவில்லை என்றும், அண்டை நாடுகளுடனான நல்லுறவைச் சிதைக்கும் இத்தகைய ஆதாரமற்ற புகார்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், மறு அறிவிப்பு வரும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதியாக உள்ளது.











