EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

ஆனி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ அணி ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான போட்டியில், இந்திய ‘ஏ’ அணியை ‘சுப்பர் ஓவர்’ சுற்றில் வீழ்த்தி இலங்கை ‘ஏ’ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

எனினும், இந்த போட்டியின் இறுதித் தருணங்களில் இரு அணி வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக மைதானத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இரு அணிகளும் சமமாக 265 ஓட்டங்களைப் பெற்றதை அடுத்து போட்டி சமநிலையில் (Tie) முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. போட்டி நிறைவடைந்ததும் மைதானத்தில் பதற்றமான சூழல் உருவானது.

இந்திய ‘ஏ’ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை ‘ஏ’ அணியின் விஷேன் ஹலம்பகே ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலுக்கான துல்லியமான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

இன்றைய ஆட்டத்தில் பெனால்டி ஓட்டங்கள் (Penalty Runs) வழங்கப்பட்டதில் ஏற்பட்ட சர்ச்சை, சுப்பர் ஓவர் விதிமுறைகள் குறித்த குழப்பம் மற்றும் சுப்பர் ஓவரின் போது நடுவரால் அறிவிக்கப்பட்ட ‘நோ-போல்’(No-Ball) தீர்ப்பு எனப் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின.

குறிப்பாக, நடுவரின் தீர்ப்புகளால் இந்திய ‘ஏ’ அணியின் தலைவர் திலக் வர்மா கடுமையான அதிருப்தியையும் விரக்தியையும் வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது.

முன்னதாக இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ‘ஏ’ அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் சூரியன்ஷ் ஷெட்ஜ் 72 ஓட்டங்களையும், விப்ராஜ் நிகாம் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பதிலுக்கு 266 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை ‘ஏ’ அணி, சதீர சமரவிக்ரமவின் அதிரடியான 93 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை எட்டியது. போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியில் நடத்தப்பட்ட சுப்பர் ஓவர் சுற்றில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி 16 ஓட்டங்களைக் குவித்தது.

கடினமான இந்த இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இந்திய ‘ஏ’ அணியை, இலங்கை பந்துவீச்சாளர்கள் திறம்படக் கட்டுப்படுத்தி தங்களது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

புத்தூரில் டிப்பர் வாகன  விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொரகல்ல கடற்கரையில் நீராட சென்றவர் உயிரிழப்பு

ஆனி 15, 2026
மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற  வேலணை மாணவி
அண்மைய செய்திகள்

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற வேலணை மாணவி

ஆனி 15, 2026
நெடுந்தீவுக்கான சேவையை  மீண்டும் ஆரம்பித்த  வடதாரகை படகு
அண்மைய செய்திகள்

நெடுந்தீவுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த வடதாரகை படகு

ஆனி 15, 2026
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட  ‘சிசு செரிய’ பேருந்து சேவை
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை

ஆனி 15, 2026
பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 15, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆனி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து  10 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து 10 என்புக்கூடுகள் மீட்பு

6 மணத்தியாலங்கள் முன்னர்
வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

6 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்
வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் –  அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால

வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In