வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள், 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட “செயற்பட்டு மகிழ்வோம்” போட்டிகளில் பங்குபற்றி பாரிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளன.
தரம் 3, 4 , 5 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வலயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டி முடிவுகளின்படி, தரம் 3க்கான ஆண்கள் பிரிவில்
வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அதே பிரிவில் பெண்கள் பிரிவிலும் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், கலவன் பிரிவில் வ/கிடாச்சூரி கருவே. அ.த.க.பாடசாலை இரண்டாமிடத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
தரம் 4க்கான போட்டிகளில், ஆண்கள் பிரிவில் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயமும், பெண்கள் பிரிவில் வ/தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலையும் இரண்டாமிடங்களைப் பெற்றுக்கொண்டன.
அத்துடன், கலவன் பிரிவில் போட்டியிட்ட வ/நொச்சிமோட்டை க. உ. வித்தியாலயம் மூன்றாமிடத்தைப் பெற்று வலயத்தின் வெற்றிப் பட்டியலை அலங்கரித்துள்ளது.
மேலும், தரம் 5க்கான போட்டி முடிவுகளில் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலுமே இரண்டாமிடங்களை தமதாக்கிக் கொண்டது.
இதேவேளை, கலவன் பிரிவில் போட்டியிட்ட வ/சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம் மாகாண மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
நடைபெற்று முடிந்த இப்போட்டிகளில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் அதிகளவான வெற்றிகளைப் பெற்று விசேட பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுடன், மாகாண மட்டத்தில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











