கியூபெக் மாகாணத்தில் கடந்த வாரயிறுதி நாட்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த வீதி விபத்துகளில் சிக்கி மொத்தம் 7 பேர் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
கியூபெக்கின் ‘சோடியர்-அப்பலாச்சஸ்’ (Chaudière-Appalaches) பிராந்தியத்தில் உள்ள (Irlande) நகராட்சிப்பகுதியில் நிகழ்ந்த விபத்தில், இரண்டு வரதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இயக்கிய சிறிய ரக எக்ஸ்கவேட்டர் இயந்திரம் எதிர்பாராதவிதமாக மோதியமை காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கியூபெக்கின் மரண விசாரணைச் சட்டத்தின்படி, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உயிரிழக்கும் போது பின்பற்றப்படும் கட்டாய விதியின் கீழ், இந்த வழக்கைக் கியூபெக் பொலிஸாரின் ‘பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு’ (Major Crimes Investigation Division) கையில் எடுத்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய 20 வயது சாரதி, புலனாய்வாளர்களின் விசாரணைக்குப் பின்னர், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற உறுதிமொழியின் (Promise to appear) அடிப்படையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரயிறுதி நாட்கள் கியூபெக் வரலாற்றில் ஒரு துரதிர்ஷ்டவசமான மற்றும் சோகமான நாட்களாக மாறியுள்ளதாக, கியூபெக் மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரடெரிக் டெஷைஸ் (Frédéric Deshaies) தெரிவித்துள்ளார்.
அந்தக் குழந்தையின் மரணத்தைக் குறிப்பிட்ட அவர், வெவ்வேறு பகுதிகளில் அதிவேகம், சீரற்ற ஓட்டுநர் கட்டுப்பாடு மற்றும் கவனக்குறைவு காரணமாக நிகழ்ந்த விபத்துகளில் மேலும் 6 பேர் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.











