EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சுகாதார வசதிகளை  கண்காணிக்க வேண்டும் –  கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை

உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சுகாதார வசதிகளை கண்காணிக்க வேண்டும் – கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை

ஆடி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் நகரப் பகுதிகளிலும் அமைந்துள்ள பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகள், இங்குள்ள பொதுச் சுகாதார வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் எமது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுகாதார வசதி வளாகத்தை (மலசலகூடம்) பொதுமக்களின் பாவனைக்காக மிக விரைவில் திறந்து விடுவதற்கான துரித முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இத்தகைய மாபெரும் உட்கட்டமைப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக, உரிய தரப்பினருடன் இணைந்து தேவையான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையில் பண்ணைப் பொழுதுபோக்குச் பூங்காவும், பருத்தித்துறையும் மிக முக்கிய இடங்களை வகிக்கின்றன. பண்ணைப் பகுதிக்குத் தினமும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும் குடும்பங்களும் வருகை தருவதுடன், இலங்கையின் வடக்கு எல்லையான பருத்தித்துறைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாவிகள் பெருமளவில் வருகை தருகின்றனர்.

இந்தச் சுற்றுலாவிகளின் வருகையைத் தக்கவைப்பதற்கும், அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கும் தூய்மையான சுகாதார வசதிகள் மிக அவசியமானவை என்பதை உணர்ந்து, இந்த இரு வளாகங்களிலும் உள்ள சுகாதார வசதிகளை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கச் சுற்றுலாப் பணியகம் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையைப் பேணுவதை உறுதி செய்ய வேண்டும். அதேவேளை, தேவையான இடங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவையும் நிதியுதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது.

இனிவரும் காலங்களில், சுற்றுலாவிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் தங்குதடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

23 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  ஐரோப்பிய ஒன்றியத்தினர்

செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்

21 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

21 மணத்தியாலங்கள் முன்னர்
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

13 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In