கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12வது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பாலமானது 40மீற்றர் நீளமானது. திறந்து வைக்கப்பட்ட புளியம்பொக்கனை பாலம் 06 வருடங்களின் பின்னர் மக்கள் பாவணைக்கு இன்று கையளிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்டிருந்து.
குறித்த பாலமானது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் 206 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலத்தின் புணர அமைப்பு பணிகள் நிறைவடைந்து இன்று (28) வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாலத்தில் அபிவிருத்தி நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி கொடுத்ததுடன் பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











