வவுனியா சிறைச்சாலையில் திடீரென அசாதாரண சூழ்நிலைகளோ அல்லது கலவரங்களோ ஏற்படும் பட்சத்தில், அவற்றை எதிர்கொள்வது மற்றும் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான விசேட ஒத்திகை நிகழ்வு இன்று சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சூழ்ந்த பகுதிகளை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டது.
சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தவும், அவசர காலங்களில் பாதுகாப்புப் படையினரின் தயார்நிலையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.











