EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு

அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு

ஆவணி 29, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, கனடிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத புதிய தீர்வை வரிகள் (Tariffs) காரணமாக, கியூபெக் (Quebec) மாகாணப் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என மாகாணப் பிரதமர் கிறிஸ்டின் ஃபிரஷெட் (Christine Fréchette) எச்சரித்துள்ளார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் இறுதி நாளில் பிரெஞ்சு மொழிப் பாதுகாப்பு தொடர்பான கியூபெக்கின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் கலாசாரக் கொள்கைகளில் அமெரிக்கா தலையிட முயன்றதாகவும், கனடாவின் இறையாண்மையை மீறும் வகையிலான இக்கோரிக்கைகளை ஏற்க முடியாது எனக் கூறிப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியமை சரியான முடிவு என்றும் ஃபிரஷெட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கியூபெக் நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Éric Girard) இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், புதிய வரிகளால் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் இழக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்படும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு கியூபெக் மாகாணப் பொருளாதார அமைச்சர் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) இரு சிறப்பு நிதி உதவித் திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்டு, அமெரிக்க வரிகளால் வருமானம் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் முதன்மைத் துறை நிறுவனங்களுக்கு 24 மாத காலச் சலுகைக் காலத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படும் என, கியூபெக் மாகாணப் பொருளாதார அமைச்சர் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டொலர் வரை வருவாய் ஈட்டும் சிறிய நிறுவனங்களுக்கு $150,000 டொலர் வரையில் கடனுதவி 12 மாத காலச் சலுகையுடன் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரிக்கை
கியூபெக்

கியூபெக் கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரிக்கை

ஆவணி 29, 2026
சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பாதிரியார்
கியூபெக்

சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பாதிரியார்

ஆவணி 28, 2026
நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது
கியூபெக்

நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

ஆவணி 28, 2026
பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி விடுத்துள்ள  முக்கிய அறிவிப்பு
கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆவணி 28, 2026
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்
கியூபெக்

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்

ஆவணி 28, 2026
மொன்றியலில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள  நான்காவது பொலிஸ் அதிகாரி
கியூபெக்

மொன்றியலில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நான்காவது பொலிஸ் அதிகாரி

ஆவணி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

2 நாட்கள் முன்னர்
நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

7 நாட்கள் முன்னர்
யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

7 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In