கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த தனியார் பதிப்பகம் ஒன்றில் நேற்றையதினம் (05) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடையில் இருந்த பெருமதி மிக்க பொருட்கள் அனைத்தும் முற்றும் முழுதாக எரிந்து நாசமாகி உள்ளது.
தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்பொழுது கடை உரிமையாளர் தனது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











