நாடு முழுவதும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைபினால் சம்பள முரண்பாட்டின் 2/3 பெறவும் பிள்ளைகளின் கல்வி உரிமைக்காகவும் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்
அந்த வகையில் முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைபினால் இன்று (12) முல்லைத்தீவு பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைதி வழியிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாத சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் 2/3 பெரும்பான்மையான சம்பளம் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும் என்றும் நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வு பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முல்லை கல்வி வலய பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட. குறித்த போராட்டத்தில் பெற்றோரிடம் பண அறவீட்டை நிறுத்து, ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் மிகுதி 2/3 பங்கை கொடு, ஆசிரியர் பற்றாக் குறைக்கு தீர்வு வழங்கு, இலவச கல்வியின் தரத்தை உறுதி செய், கற்றல் உபகரணங்களை சாதாரண விலையில் கொடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.