மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி பனிக்கன்குளம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (25) இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில்
குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த நிலையில் அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்