திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப்பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்து இடப்பெற்றுள்ளது.
நேற்று(13) மாலை இடம்பெற்றது இந்த விபத்தில் தந்தை உயிரிழந்ததுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு போலீசார் தெரிவித்தனர்.பொக்குனுவிட்ட,வெலிக்கடை பிரதேசத்தைச்சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது,வேனில் பயணித்த தந்தை,தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ள நிலையில் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.
தாயும் மகனும் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.