தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் நல்லூரில் உள்ள நினைவு தூபியில் வைக்கப்பட்டுள்ள தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.