இலங்கையில் நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கிணங்க தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.











