வன்னிமாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை தமிழரசுக்கட்சி இன்றைய தினம் தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்தது.
வன்னிமாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியாவில் வைத்தியர் ப. சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன்,சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா அபிவிருத்திஉத்தியோகத்தர் பா. கலைதேவன் ஆகியோரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ. கமலேஸ்வரனும், மன்னார் மாவட்டத்தில் சட்டத்தரணி செ. டினேசன், சட்டத்துறை மாணவி அ. கலீபா ஹலிஸ்ராஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.











