EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியா கள்வர்களைத்தான் மீண்டும் தெரிவு செய்கிறோம் – நிரோஸ்குமார்

வவுனியா கள்வர்களைத்தான் மீண்டும் தெரிவு செய்கிறோம் – நிரோஸ்குமார்

கார்த்திகை 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பிரச்சனைகள் தீர்க்கப்படாத போதும் கள்வர்களையே மீண்டும் தெரிவுசெய்கிறோம். அத்துடன் தேர்தல் காலங்களில் இங்கு வருபவர்களை பார்த்தால் திருவிழாக் காலங்களில் வருகின்ற கோமாளிகள்,குரங்காட்டிகள் போல இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட வேட்பாளர் சாந்திகுமார் நிரோஸ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

தமிழர்களுக்கு இங்கு பலபிரச்சனைகள் இருக்கிறது.
தேசியபிரச்சனை, 13 வது திருத்தப்பிரச்சனை என பல இருக்கிறது. நானும் இங்கு பிறந்த தமிழன்தான். வன்னியை சேர்ந்தவன் தான். ஆனால் பாராளுமன்றம் சென்ற பிரதிநிதிகள் எமக்கு எதைபெற்றுத்தந்தார்கள். இன்று அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் மக்கள் உள்ளனர்.

எனவே மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக. நாம் இளைஞர்கள் முன்வந்துள்ளோம். இப்படியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டாமல் இருக்கின்ற போதும் அதே கள்வர்களைத்தான் மக்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர். எனவே களவு, ஊழல் கொண்ட பிரதிநிதிகளை இம்முறை நிராகரியுங்கள்.

இந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் பணத்தை அள்ளி வீசுகின்றனர். அது எங்கே இருந்து வருகின்றது என எமக்கு தெரியவில்லை. எனவே மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஒரு தேசிய கட்சியில் தமிழ் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் கட்சியாக நிச்சயம் வரும். எனவே வன்னியில் இளம் தமிழன் ஒருவனை அனுப்புங்கள். தேர்தல் காலங்களில் இங்கு வருபவர்களை பார்த்தால் திருவிழாக் காலங்களில் வருகின்ற கோமாளிகள்,குரங்காட்டிகள் போன்று வித்தைகாட்டுவது போல பலர் வருவார்கள். வீடுகளிற்கு வருபவர்கள் தொடர்பாக உங்கள் மனதுக்குள்ளே சிந்தியுங்கள். என்னத்தை செய்தார்கள் என்று சிந்தியுங்கள். நாங்கள் செய்த பின்னரே மக்களிடம் வருகிறோம். எமது தலைவர் சஜித் பிரேமதாச பலவிடயங்களை செய்துள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்து நாம் பலவற்றை செய்துள்ளோம். எனவே ஆளும் தரப்பாக வந்தால் நாம் அபிவிருத்தியை நிச்சயமாக செய்வோம். எமக்கு 5வருடங்கள் தேவையில்லை 2வருடங்கள் மாத்திரம் எமக்கு போதும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து வீட்டுத்திட்டங்களும் பூரணப்படுத்தப்படும். எனவே ஆளும் கட்சியின் தமிழ்ப் பிரதிநிதியாக உழலற்ற ஒருவரை அனுப்புங்கள். அதன் மூலமே அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கமுடியும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 10, 2026
கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்
அண்மைய செய்திகள்

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்

ஆனி 10, 2026
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

5 நாட்கள் முன்னர்
மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

11 மணத்தியாலங்கள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

5 நாட்கள் முன்னர்
அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

2 நாட்கள் முன்னர்
டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In