நாட்டில் அதிகமானோருக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை அறிகுறிகளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய பொதுமக்களுக்கு இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.











