கியூபெக் மாகாணத்தில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் கொரோனா காலத்திற்குப் பிறகு, தற்போது 40 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதீத விலையேற்றம் காரணமாக, பல குடும்பங்கள் தங்களது இல்லத்தைப் புதுப்பிக்கும் திட்டத்தைப் பாதியிலேயே நிறுத்தும் அல்லது தள்ளிப்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பொருட்களின் விலை உயர்வு, பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் புதிய வர்த்தக வரிகள் ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மொண்ட்ரியலைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர் ரான் ரேசைட் (Ron Rayside) இது குறித்துக் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் கட்டுமானச் செலவுகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டில் ஒரு டொலருக்குக் கிடைத்த ஒரு பொருள் அல்லது சேவை, இன்று 3 டொலர் வரை உயர்ந்துள்ளது.
செலவைக் குறைப்பதற்காக கியூபெக் மக்கள் தற்போது வர்ணப்பூச்சுப் பூசுதல், தரைத் தளம் அமைத்தல் போன்ற வேலைகளைத் தாங்களே செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை, கியூபெக்கில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வீட்டுப் பராமரிப்புப் பணிகள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











