அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை என்று கூறி வருவதோடு, ஈரானில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில்,
ஈரானில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. ஈரானின் தலைவர்கள், நான் அமெரிக்காவில் செயற்படுவது போன்று செயற்பட வேண்டும். மக்களை அமைதிப்படுத்துவதற்காக அவர்களை கொல்ல கூடாது. தலைமை என்பது மரியாதையுடன் தொடர்புடையது. மரணம் அல்லது பயத்துடன் தொடர்புடையது அல்ல .
கொமெய்னியின் தலைமையில் உலகத்தில் மக்கள் வாழவே தகுதியில்லாத நாடாக ஈரான் மாறி விட்டது . கொமெய்னி எடுத்த நல்ல முடிவு என்றால், போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை தூக்கில் போடாததுதான் இவ்வாறாக அவர் கூறினார்.






