EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

ஆனி 16, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் (Montreal) நகரில் உள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில், தங்கியிருந்த வயோதிபர்களை துன்புறுத்தி, அவர்களுக்கு தவறான மருந்துகளை வழங்கிய, பராமரிப்பு இல்ல உரிமையாளருக்குக் கனேடிய நீதிமன்றம் வீட்டுச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மொண்ட்ரியலின் பீக்கன்ஸ்ஃபீல்ட் (Beaconsfield) பகுதியில் ரெசிடென்ஸ் ஆல்ப்ஸ் (Residence Alps) என்ற முதியோர் இல்லத்தை நடத்தி வந்த 67 வயதான பிரமீளா கூப்லால் (Pramela Kooblall) என்ற பெண் மீது, தனது பராமரிப்பில் இருந்த மூன்று முதியவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை வழங்கத் தவறியமை மற்றும் அவர்களின் மருத்துவ ஆவணங்களை போலியாகத் தயாரித்தமை முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிறுநீர் மற்றும் மலக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியாத (Incontinent) முதியவர்கள், தங்களின் கழிவுகள் படிந்த டயப்பர்களுடனேயே (Couches souillées) பல நாட்கள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதியவர்களை எப்போதும் தூக்கக் கலக்கத்திலேயே வைத்திருப்பதற்காக, தூக்கத்தை வரவழைக்கும் குவாட்டியாபைன் (Quetiapine) என்ற சக்திவாய்ந்த மாத்திரையை ஒரு முதியவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட இருமடங்காக பிரமீளா வழங்கியுள்ளார்.

மேலும், அந்த மாத்திரை பரிந்துரைக்கப்படாத மற்றொரு முதியவளுக்கும் வலுக்கட்டாயமாக அதை ஊட்டியுள்ளார். நீதிமன்ற விசாரணையில், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமீளா கூப்லால் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு சார்ந்த இறுதி விசாரணை மொண்ட்ரியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த இறுதி விசாரணையில், அரசு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்களின் கூட்டுப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எரிக் பவுத்ரியர் (Éric Poudrier), குற்றவாளிக்கு வீட்டுச் சிறைத் தண்டனை (Prison à la maison) விதித்துத் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்
அண்மைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

ஆனி 18, 2026
2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

ஆனி 18, 2026
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள  வீடற்றோர் பிரச்சினை
கியூபெக்

மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள வீடற்றோர் பிரச்சினை

ஆனி 17, 2026
மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM  ரயில் சேவைகள் 
கியூபெக்

மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM ரயில் சேவைகள் 

ஆனி 17, 2026
ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்
கியூபெக்

ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்

ஆனி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்
புத்தூரில் டிப்பர் வாகன  விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

மொரகல்ல கடற்கரையில் நீராட சென்றவர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

3 நாட்கள் முன்னர்
வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

13 மணத்தியாலங்கள் முன்னர்
வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் –  அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால

வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In