புதிதாக உருவாக்கப்பட்ட பன்முகத்தன்மைக்கான ஆலோசனைக் குழுவில், கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படாமைக்கு எதிராக, நாடளாவிய ரீதியில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.
ஓய்வுபெற்ற புகழ்பெற்ற கறுப்பின பெண் நீதிபதி கொரின் ஸ்பார்க்ஸை (Corrine Sparks) இக்குழுவில் புதிய உறுப்பினராக இணைப்பதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இனவாதம், பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராகப் போராடுவதற்காகப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான லிபரல் அரசாங்கத்தால் ‘உரிமைகள், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் செய்வதற்கான ஆலோசனைக் குழு’ (Advisory Council on Rights, Equality and Inclusion) அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஜூன் மாதத் தொடக்கத்தில் இதன் அதிகாரப்பூர்வ உறுப்பினர் பட்டியல் வெளியான போது, அதில் ஒரு கறுப்பினப் பிரதிநிதி கூட இடம்பெறாதது கனேடிய அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், நாட்டின் மரபுரிமைத் திணைக்களம் (Department of Canadian Heritage) கடந்த அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நீதித்துறையில் தடம் பதித்த ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி கொரின் ஸ்பார்க்ஸ் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.











