வவுனியா மாநகரசபையின் செங்கோல் மற்றும் முதல்வரின் அங்கி, பதக்கம் என்பன முன்னாள் முதல்வரினால் எடுத்துச்சென்றமை தொடர்பாக மாநகரசபையின் செயலாளரினால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகரசபையின் ஏனைய உறுப்பினர்களான பிரேமதாஸ் மற்றும் சி.கிரிதரன் ஆகியோர் தெரிவித்தனர்.
மாநகரசபையின் செங்கோல், அங்கி மற்றும் பதக்கம் என்பன காணாமல் போனமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாநகரசபையின் செங்கோல், முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆளுனரினால் மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவரினால் தன்னுடைய பொருட்களுடன், குறித்த பொருட்களையும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடயம் இன்றையதினம் மாநகரசபை செயலாளரினால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் பொலிஸார் மாநகரசபைக்கு வந்து விசாரணையினை முன்னெடுத்திருந்ததுடன், விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்திருந்திருந்தனர் என அவர்கள் தெரிவித்தனர்.











