மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) 30-6-2026 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை அனுரவின் வாயை போல பொய் குற்றச்சாட்டு என பிள்ளையான் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி சிஐடி யினர் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு பிள்ளையான் உட்பட 3 பேரையும் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்
இதன் போது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட போது பிள்ளையான் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பிள்ளையானுக்கு எதிராக சிஜடி யினர் தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த 2015ம் திகதி மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு அவரை மட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்.
தற்போது வெலிசறை கடற்படை சிறையில் சிறை கைதிகளுக்கான உரிமைகள் வழங்கப்படுகிறது என சந்தேகிப்பதாகவும் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர் எனவே அவரின் நலன் கொண்டு அவரை மட்டு சிறைச்சாலையில் வைக்குமாறு நீதவானிடம் கோரினர்.
இதேவேளை சந்தேக நபரான முகமட் சகீத் தனக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு நேரம் கேட்டதை அடுத்து நீதவான் வாக்கு மூலத்தை வழங்குமாறு தெரிவித்து 3 பேரையும் எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், பிள்ளையானுக்கு எதிராக கடந்த 2024 ம் ஆண்டு கல்லடி பாலத்திற்கு அருகில் தனியார் காணியில் உள்நுழைந்து வேலிகளை பிடுங்கிய சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜப்பசி மாதம் 19 ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதையிட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் ஒவ்வொருவரையும் பொலிசார் தீவிர சோதனை செய்து கொண்டதுடன் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் பிள்ளையானை காண்பதற்காக அவருடைய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது.











