EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்

கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்

ஆடி 29, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தகுதியுடைய அனைத்து வயதுவந்த பிரஜைகளும் இனி தங்களது கடவுச்சீட்டுகளை (Passport) இணையவழியில் புதுப்பித்துக்கொள்ள முடியும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் நீக்கப்பட்டு, இச்சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் லேனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) வான்கூவர் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இப் புதிய நடைமுறையை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இப்புதிய திட்டத்தின் மூலம், கனடியப் பிரஜைகள் சேவை மையங்களுக்கு நேரடியாகச் செல்லாமலோ அல்லது ஆவணங்களை அஞ்சல் மூலம் அனுப்பாமலோ, தங்களது வீடுகளிலிருந்தவாறே இணையம் வழியாகக் கடவுச்சீட்டைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது புதுப்பித்தல் விண்ணப்பம், அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட டிஜிட்டல்
புகைப்படம் மற்றும் கட்டணங்களை இணையத்தள போர்ட்டல் (IRCC Portal) மூலம் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன் தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையையும் உடனுக்குடன் (Real-time tracking) இணையவழியில் அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இணையவழியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 20 வணிக நாட்களுக்குள் (Business days) பரிசீலிக்கப்பட்டு, புதிய கடவுச்சீட்டு
விண்ணப்பதாரரின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து 30 வணிக நாட்களுக்குள் கடவுச்சீட்டு கிடைக்கப் பெறாவிடின், விண்ணப்பக் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படுவதுடன், கடவுச்சீட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற சேவை உத்தரவாதத்தையும் (Service guarantee) மத்திய அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர், கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்குள் முடியும் தருவாயில் உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே காலாவதியானவர்கள் மட்டுமே இணையவழியில் விண்ணப்பிக்க முடிந்தது.

மேலும், நாளொன்றுக்கு 2,000 விண்ணப்பங்கள் என்ற வரம்பும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பின் மூலம் இந்த வரம்புகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
கனடா

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆடி 29, 2026
அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஆடி 29, 2026
கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு  அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு
கனடா

கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு

ஆடி 29, 2026
அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான  ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு
கனடா

அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

ஆடி 29, 2026
கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  
கனடா

கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

ஆடி 29, 2026
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் –  விரிவான விசாரணை நடத்த திட்டம்
கனடா

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் – விரிவான விசாரணை நடத்த திட்டம்

ஆடி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான  மூன்று இளைஞர்கள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

3 நாட்கள் முன்னர்
ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்

ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்

2 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’  பேருந்து சேவை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்

1 நாள் முன்னர்
முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

1 நாள் முன்னர்
நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In