காவிரி நிதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, உதயநிதியின் கைது நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேடைகளில் தவறாகப் பேசினால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, எடுத்த எடுப்பிலேயே கைது நடவடிக்கையில் இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.











