இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் கலிமந்தான் பகுதிகளில் காட்டுத்தீ மற்றும் நிலத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் கடுமையான நச்சுப் புகை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு, மத்திய மற்றும் தெற்கு கலிமந்தான் பகுதிகளிலும், ரியாவ், ஜாம்பி மற்றும் தெற்கு சுமத்ரா பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டுத்தீயால் உருவாகும் புகை அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனே பகுதிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆபத்தான காற்று மாசு காரணமாக இந்தோனேசியாவின் ஆறு மாகாணங்களில் சுமார் 14 இலட்சம் மாணவர்கள் இணையவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர்.











