காசாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் மின்பிறப்பாக்கிகளைத் (Generators) தொடர்ந்து இயக்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மின்சார விநியோகக் குறைபாடு மற்றும் எரிபொருள் வரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவசர மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, தீவிர சிகிச்சைப் பிரிவுகள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கூடங்களில் பயன்பாட்டில் உள்ள மின்பிறப்பாக்கிகளுக்குத் தேவையான எரிபொருள் கிடைக்காமையால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.
அத்துடன், குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற பொதுச் சுகாதாரச் சேவைகளுக்கான மின்பிறப்பாக்கிகளையும் இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு உடனடியாகச் சீரமைக்கப்படாவிட்டால் காசாவில் அத்தியாவசிய பொதுச் சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாகவும் தற்போது எச்சரிக்கப்பட்டுள்ளது.











