தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பேன் எனத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உறுதிமொழி ஏற்றுள்ளார்.
சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்விலேயே அவர் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
தமிழ்நாட்டில் பெரியாரின் 147ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், அரசு ஊழியர்களுடன் இணைந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கெடுத்தார்.
இதன்போது உறுதிமொழி ஏற்றுப் பேசிய முதலமைச்சர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியையும் தனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தனது செயல்பாடுகள் சுயமரியாதை, ஆளுமைத் திறன் மற்றும் பகுத்தறிவுப் பார்வையைக் கொண்டவையாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மானுடத்தின் மீதான பற்றையும் மனிதபிமானத்தையும் என்றும் போற்றுவதுடன், சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பேன் என்றும் முதலமைச்சர் இதன்போது உறுதிபூண்டார்.











