ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் ரஷ்யா மேற்கொண்டு வரும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இத்தகைய செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சர்வதேச விதிகளை மீறும் வகையில் ரஷ்யா முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.











