யாழ்.பல்கலைக்கழக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு மருதனார்மடம் நுண்கலை பீடத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆய்வு மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதன்போது நுண்கலைப்பீடத்தின் இசைத்துறையினால் முன்னெடுக்கப்படும் ஆய்வானது முதல் முறையாக உலகளாவிய ரீதியில் தமிழர்களின் பண்பாட்டினையும் மரபினையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், இசை துறை பீடாதிபதி மற்றும் இந்திய தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.











