67 நபர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கனடா குடிவரவுத் துறை அதிரடியாக இடைநிறுத்தம் (Suspended) செய்துள்ளது. மத்திய அரசின் புதிய வம்சாவளிக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்களில், உரிய ஆவண ஆதாரங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறியே, இந்த இடைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் அதிகாரிகளுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில் ஏற்பட்ட தெளிவற்ற தன்மையே (Unclear guidance) இந்தத் தவறுக்குக் காரணம் எனக் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), கடந்த ஆண்டு இறுதியில் இயற்றப்பட்ட ‘மசோதா சி-3’ (Bill C-3) சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சுமார் 6,500 வம்சாவளிக் குடியுரிமை விண்ணப்பங்களையும் முழுமையாக மறுஆய்வுக்கு உட்படுத்தியது.
இந்த தணிக்கையின் முடிவில், இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களில் 67 குடியுரிமைச் சான்றிதழ்கள் போதிய ஆதாரங்களின்றி வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டு அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
இந்த 67 பேரின் தகுதி நிலையை மீண்டும் உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு, மத்திய அரசாங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.











