பெருவில் 5.1 ரிக்டர் மற்றும் 3.7 ரிக்டர் அளவில் இரட்டை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தால் 48 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், 300 இற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.











