தென் அமெரிக்க நாடான கயானாவில் சிறிய ரக கப்பலொன்று நடுக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலைநகர் ஜோர்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு நேற்று முன்தினம் சென்ற சிறிய ரக கப்பலே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கப்பலில் பெண்கள், குழந்தைகள் என மொத்தமாக 133 பேர் பயணித்திருந்த நிலையில், இதில் 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் மீதமுள்ள 66 பேரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











