அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 90 ஆயிரத்து 306 பேர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 65 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், குறித்த மாதத்தில் 29 ஆயிரத்து 973 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், ஜூன் மாதத்தில் 21 ஆயிரத்து 533 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் நான்காயிரத்து 959 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96 சதவீதமான, 47 ஆயிரத்து 827 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 19 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள், அதி அபாய டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











