செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகளை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியதை அடுத்து, இன்றைய தினம் சி. சிறிதரன் அகழ்வு பணிகளை பார்வையிட்டார்.











