வெள்ளைச் சீனியானது, உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இச் சீனிக்கு மாற்றாக பேரீச்சை பொடி சிறந்த தீர்வாக இருக்கும்.
பேரீச்சை பொடியில் பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி அக்சின்ட்கள் நிறைந்துள்ளன.
எவ்வாறு தயாரிப்பது?
பேரீச்சம் பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி விதைகளை முழுமையாக நீக்கவேண்டும்.
வெட்டிய துண்டுகளை சுத்தமான துணியில் பரப்பி, வெயிலில் நன்றாக காயவிட வேண்டும்.
முழுமையாக ஈரப்பதம் நீங்கியவுடன் துண்டுகள் கல் போல மாறும் வரை காயவைப்பது அவசியம்.
பின்னர், ஈரம் முற்றிலும் நீங்கியதை உறுதி செய்யும் வண்ணம், ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வறுக்கவும். இது பொடி நீண்ட நாள் கெடாமல் இருக்க உதவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பேரீச்சை பொடியின் நன்மைகள்
பேரீச்சை பொடியிலுள்ள ஃப்ளாவனாய்டுகள், பீனாலிக் அமிலமானது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, இதய நோய், புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கின்றன.
இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாமல் சீராக வைக்கிறது.
மலச்சிக்கலை தடுக்கும். குடலில் உள்ள நல்ல பக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதில் உள்ளடங்கியிருக்கும் கல்சியம், மெக்னீசியம், பொலஸ்பரஸ் ஆகியன எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
இனிப்புப் பலகாரங்கள், கேக், குக்கீஸ் செய்யும்போது பயன்படுத்தலாம்.
கோப்பி, தேநீரிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.











