போலந்தைச் சேர்ந்த 57 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் அடங்கிய குழுவினர், போஸ்னியா-ஹெர்சகோவினாவில் உள்ள புனிதத் தலத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஹங்கேரியின் M3 அதிவேக நெடுஞ்சாலையில் மெஸோகெரெஸ்டெஸ் அருகே எதிர்பாராத கோர விபத்து நேரிட்டது.
நள்ளிரவு நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் ஜன்னல்கள் உடைந்து பயணிகள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்து நடந்த இடத்திலேயே 11 பேரும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஒருவரும் என மொத்தம் 12 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்











