கடந்த 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $39 டிரில்லியனாக இருந்த கடன், வெறும் 5 மாதங்களுக்குள் மேலும் ஒரு டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியான நிதிப்பற்றாக்குறை, கோவிட்-19 நிவாரணங்களுக்கான செலவினங்கள், ராணுவப் பாதுகாப்புச் செலவுகள், மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களே இந்த விரைவான கடன் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
வாங்கிய கடனுக்காக அரசு செலுத்தும் வட்டித் தொகையே ஆண்டிற்கு ஒரு டிரில்லியன் டாலரைக் கடந்து, நாட்டின் மிக முக்கியச் செலவினங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த $40 டிரில்லியன் கடன் சுமையானது அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் தோராயமாக $117,000 கடன் இருப்பதற்குச் சமமாகும்.
இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, வீட்டு வாடகை, கார் கடன்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்க கடன்களுக்கான உச்சவரம்பு எல்லை $41.1 டிரில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதே வேகத்தில் கடன் அதிகரித்தால் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த வரம்பை எட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடும் பொருளாதார முட்டுக்கட்டை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.











